அதிகரித்து வரும் நடமாட்டம் காரணமாக, பள்ளி ஒரு பன்முக பண்பாட்டு இடமாக மாற்றமடைந்துள்ளது. புலம்பெயர் பின்னணியுடைய குழந்தைகளும் இளைஞர்களும் வாழிட மொழியைக் கற்றுக் கொள்வதோடு அவர்களின் தாய்மொழியையும் தொடர்ந்து வளர்க்க வேண்டும். இது தாய்மொழி ஆசிரியரின் பொறுப்பு ஆகும். அவர்களின் கற்பித்தல் தரம் மற்றும் கற்பித்தல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, அங்குள்ள கற்பித்தல் முறைகள் அரச பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகளை ஒத்ததாக இருக்க வேண்டும். «பாரம்பரிய மொழிகற்பித்தற் கருவிகள்» ஆசிரியர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது.

«அடித்தளங்களும் பின்னணிகளும்» எனும் நூல் புலம்பெயர் நாடுகளின் தற்போதைய கல்வியியல் மற்றும் வழிமுறைகளைப் பற்றிய முக்கிய தகவல்களை முன்வைக்கிறது. அறிவுசார் பரிந்துரைகளைக் கொண்ட ஐந்து செயல்நூல்கள், மொழி கற்பித்தலின் பல்வேறு பகுதிகளுக்கான நடைமுறைக் கற்பித்தல் பரிந்துரைகள் மற்றும் திட்டமிடலுக்கான எடுத்துக்காட்டுகளை வழங்குகின்றன.